தமிழ் கவிதைகள்
வார்த்தைகள் வஞ்சனை செய்கிறது
By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் வஞ்சனை செய்கிறது!.
வள்ளுவனிடமிருந்து வார்த்தைகளை
வரவழைத்து வானுயர்ந்த கோபுரத்தில்
வரி வரியாய் உன்னை
வரைந்து கொண்டிருக்கிறேன்
வஞ்சிக்கொடி உன் ஓவியத்தை!.
வாயுதேவனும் வாயடைத்து நிற்கிறான் இவ்வார்தைகளுக்கு உரியவள் யார்..? என்று!.