தமிழ் கவிதைகள்
சூடாமணி
By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
காவியமும் ஓவியமும் காணாத
கந்தர்வ நாட்டு அழகியே!.
சூது வாது அறியாத சொப்பனத்தில்
உலவாடும் சுந்தரியே!.
என் கற்பனை கண்ணாடியில் வரைந்த கரைபடியா ஓவியமே!
நீ சூடாமல் சூடாமணியும்
அழகு பெறவில்லை
உன்னுடன் பேசாத பேச்சுக்கள்
இனிக்கவில்லை
உன்னை காணாத நாட்களை
கடக்க முடியவில்லை
உன் ஞாபாகமோ
என் நினைவுகளில் ஓடும்
அன்பு தொல்லை!.